Published : 09 Jan 2023 12:26 PM
Last Updated : 09 Jan 2023 12:26 PM

தீர்மானம் கொண்டு வந்த முதல்வர்; பாதியில் வெளியேறிய ஆளுநர்: சட்டப்பேரவையில் பரபரப்பு

பாதியில் வெளியேறிய ஆளுநர் ஆர்.என்.ரவி

சென்னை: அரசு தயாரித்த உரையை ஆளுநர் முறையாக படிக்கவில்லை என்று பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியபோது ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து பாதியில் வெளியேறினார்.

சட்டப்பேரவையில் வழக்கமாக ஆண்டு முதல் கூட்டம் ஆளுநர் உரையுடன் தொடங்கும். அந்த வகையில், இந்தாண்டுக்கான முதல் கூட்டம் இன்று (ஜன.9) காலை 10 மணிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. காலை 10 மணிக்கு கூட்ட அரங்கில் ஆளுநர் தனது உரையை வாசிக்க தொடங்கினார். இதன்படி காலை.10.50 மணி வரை ஆளுநர் தனது உரையை வாசித்தார். உரையை வாசித்து முடிக்கப்பட்டதும், அதன் தமிழாக்கத்தை பேரவைத்தலைவர் மு.அப்பாவு வாசித்தார்.

இதன்பிறகு பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசு தயாரித்த உரையை ஆளுநர் முறையாக படிக்கவில்லை என்று பேரவையில் குற்றச்சாட்டினார். அவர் பேசுகையில்,"தமிழக அரசு தயாரித்த உரையை ஆளுநர் முறையாக படிக்கவில்லை. உரையில் ஆளுநர் சொந்தமாக சேர்த்துப்படித்த எதுவும் அவைக்குறிப்பில் இடம்பெறாது" என்று தெரிவித்தார். இது தொடர்பாக முதல்வர் பேசிக் கொண்டு இருக்கும் போது ஆளுநர் ஆர்.என்.ரவி பாதியில் வெளியேறினார். இதனால் சட்டப்பேரவையில் சலசலப்பு ஏற்பட்டது. ஆளுநர் உரையுடனான சட்டப்பேரவை ஆண்டு முதல் நாள் கூட்டமானது தமிழ்த் தாய் வாழ்த்து இசைக்கப்பட்டு ஆரம்பித்து தேசிய கீதம் இசைக்கப்பட்டு நிறைபெறுவதே மரபு. இந்நிலையிலை ஆளுநர் தேசியகீதம் இசைக்கப்படுவதற்கு முன்னதாக நிறைவு பெற்றதற்கு தமிழக அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x