Published : 07 Jan 2023 05:06 PM
Last Updated : 07 Jan 2023 05:06 PM

60+ வயதினர் 5,675 - தமிழகத்தில் 67.75 லட்சம் பேர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு

வேலைவாய்ப்பு முகாம் | கோப்புப் படம்

சென்னை: தமிழகத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 67.75 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர். இதில் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 5,675 பேர் ஆகும்.

தமிழகத்தில் உயர் கல்வி படிப்பு முடிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஆண்டுக்கு லட்சக்கணக்கான மாணவர்கள் பள்ளி மற்றும் உயர் கல்வி முடித்து வெளியே வருகின்றனர். இவர்களில் பலரும் வருடம் தவறாமல் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் தங்களின் பதிவை புதுப்பித்து வருகின்றனர்.

இந்நிலையில், தமிழகத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துவிட்டு 67.75 லட்சம் பேர் அரசு வேலைக்காக காத்துக் கொண்டுள்ளது தெரியவந்துள்ளது. கடந்த டிசம்பர் 31-ம் தேதி வரை 36,14,327 ஆண்கள், 31,60,64 பெண்கள், 275 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 67,75,250 பேர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளனர்

இவர்களில் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் 19,09,325. 19 முதல் 30 வயது வரை உள்ளவர்கள் 27,95,278, 31 முதல் 45 வயது வரை உள்ளவர்கள் 18,34,994, 45 முதல் 60 வயது வரை உள்ளவர்கள் 2,29,978, 60 வயதுக்கு மேல் - 5,675 பேர் என்று மொத்தம் 67,75,250 பேர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x