Published : 07 Jan 2023 07:38 AM
Last Updated : 07 Jan 2023 07:38 AM

`தமிழ்நாடு’ குறித்த ஆளுநரின் பேச்சுக்கு தலைவர்கள் கண்டனம்

சென்னை: ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, ‘தமிழ்நாடு’ என்று அழைப்பதைவிட தமிழகம் என்ற பெயரே பொருத்தமாக இருக்கும் என கூறியிருந்தார்.

இந்த கருத்துக்கு கண்டனம் தெரிவித்து அரசியல் கட்சித் தலைவர்கள் கூறியிருப்பதாவது:

முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார்: அதிமுகவினர் அண்ணா வழியில் வந்தவர்கள். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற கட்சியின் பெயரிலேயே அண்ணா இருக்கிறார். தமிழ்நாடு என்று அழைக்கப்பட வேண்டும் என 1963-ம் ஆண்டிலேயே குரல் கொடுத்தவர் அண்ணா. எனவே, அண்ணாவின் கருத்துதான் அதிமுகவின் கருத்து.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ: ஆளுநரின் பேச்சு கடும் கண்டனத்துக்கு உரியது. ஆர்எஸ்எஸ் அமைத்துக் கொடுத்த தடத்தில் நின்றுதான் ஆர்.என்.ரவி பேசிக் கொண்டிருக்கிறார். எல்லை மீறிப் பேசுவது அவர் வகிக்கும் பொறுப்புக்கு அழகல்ல.

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்: ஆளுநர் ஆர்.என்.ரவி தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி, சர்ச்சை நாயகனாக உருவெடுத்து வருகிறார்.

விசிக தலைவர் திருமாவளவன்: ஆர்.என்.ரவி என்பதைவிட ஆர்எஸ்எஸ் ரவி என்பதே சரியாக இருக்கும். ஜனநாயகத்துக்கான ஆளுநர் என்பதைவிட, சனாதனத்துக்கான ஆளுநர் என்பதே சரியாக இருக்கும்.

மனித நேய மக்கள் கட்சித் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா: பாஜகவின் பிரித்தாலும் சூழ்ச்சியை ஆளுநர் முன்னெடுத்து இருப்பது கடும் கண்டனத்துக்குரியது.

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன்: தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்வதற்காக, பல போராட்டங்களை நடத்தி உள்ளோம். இதை மாற்ற சொல்வதற்கு ஆளுநர் யார். தமிழ்நாடு வாழ்க.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x