Published : 13 Dec 2016 08:43 AM
Last Updated : 13 Dec 2016 08:43 AM
திருவண்ணாமலை அண்ணாமலை யார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 30-ம் தேதி காவல் தெய்வமான துர்க்கை அம்மன் உற்சவத்துடன் தொடங்கியது.
கடந்த 9-ம் தேதி பக்தர்கள் வெள்ளத்தில் மகா ரத தேரோட்டம் நடைபெற்றது. இதையடுத்து, விழாவின் முக்கிய நிகழ்வாக பரணி தீபம் நேற்று அதிகாலை 4 மணியளவில் ஏற்றப்பட்டது. இதையொட்டி, மூலவர் மற்றும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், மகா தீபாராதனை செய்யப்பட்டது.
பரம்பொருள் ஒருவரே, அவரே நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் என்று பஞ்ச சக்தியை குறிக்கும் வகையில் 5 வடிவங்களாக காட்சிக் கொடுக்கிறார். அதுவே ஏகன் அநேகனாகும். இதையடுத்து மகா தீபம் ஏற்றுவதற்கான பணிகள் மாலையில் தொடங்கின. இதையொட்டி பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, ஒவ்வொருவராக தங்ககொடி மரத்தை வலம் வந்து தீப தரிசன மண்டபத்தில் அமர்ந்தனர்.
பின்னர், தங்க கொடி மரம் முன்பு உள்ள அகண்டத்தில் தீபச்சுடர் ஏற் றப்பட்டது. அப்போது 2,668 அடி உய ரம் உள்ள அண்ணாமலை உச்சி யில் வைக்கப்பட்ட புதிய கொப்பரை யில் மகா தீபத்தை பருவத ராஜ குல சமூகத்தினர் மாலை 6 மணிக்கு ஏற்றினர். அப்போது அண்ணாமலை யாரை அரோகரா என்ற பக்தி முழக்கத்துடன் தரிசனம் செய்தனர்.
அண்ணாமலையில் மகா தீபம் தொடர்ந்து 11 நாட்களுக்கு ஏற்றப் படும். இதையடுத்து, அய்யங்குளத் தில் தெப்பல் உற்சவம் இன்று முதல் 3 நாட்கள் நடைபெறும். பின்னர், சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் 16-ம் தேதி விழா நிறைவு பெறுகிறது.
கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கொட்டும் மழையில் கிரிவலம் சென்ற னர். பக்தர்களை போன்று உண்ணாமுலை அம்மன் சமேத அண்ணாமலையார் நாளை கிரிவலம் வருகிறார். மகா தீபம் நிறைவு பெற்றதும், மலையில் இருந்து கோயிலுக்கு கொப்பரை கொண்டு வரப்படும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT