Published : 28 Dec 2022 02:04 PM
Last Updated : 28 Dec 2022 02:04 PM

'பிற்போக்குச் சக்திகளிடமிருந்து நாட்டை காத்திட ஆயத்தமாகுங்கள்' - திமுக தொண்டர்களுக்கு ஸ்டாலின் அறிவுரை

ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய மு.க.ஸ்டாலின்

சென்னை: பிற்போக்குச் சக்திகளிடமிருந்து நாட்டை காத்திட படைக்கலன்கள் ஆயத்தமாகட்டும் என்று என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தி.மு.க.வின் அனைத்து அணிகளின் நிர்வாகிகள் மற்றும் குழுக்களின் உறுப்பினர்கள் கூட்டம் இன்று (டிச.28) காலை சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.

இது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்," சமத்துவம் - சமூகநீதி - பகுத்தறிவு வாயிலாக முற்போக்கான சமுதாயத்தைக் கட்டமைக்கும் நமது கடமையை நிறைவேற்றிட; சாதி - மத ஏற்றத்தாழ்வுகளை வலிமைப்படுத்தி ஆதிக்கத்தை நிறுவத் துடிக்கும் பிற்போக்குச் சக்திகளிடமிருந்து நாட்டையும் மக்களையும் காத்திட நமது வலிமைமிகு படைக்கலன்கள் ஆயத்தமாகட்டும்!" இவ்வாறு அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x