வாக்காளர் பட்டியலில் சேர்க்க 92,000 பேர் விண்ணப்பம்

வாக்காளர் பட்டியலில் சேர்க்க 92,000 பேர் விண்ணப்பம்
Updated on
1 min read

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி நடைபெற்று வரும் நிலையில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இதுவரை 92,626 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர் பணிகள் நிறைவடைந்து கடந்த 19-ம் தேதி அனைத்து மாவட்டங்களிலும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி, தமிழகத்தில் 5.43 கோடி வாக்காளர்கள் உள்ளனர். 97.37 லட்சம் பேர் நீக்கப்பட்டனர்.

வரைவு வாக்காளர் பட்டியல் தமிழகம் முழுவதும் உள்ள 75 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. இதை ஏராளமான வாக்காளர்கள் பார்வையிட்டு வருகின்றனர். இதனிடையே அரசியல் கட்சிகள் சார்பில் வாக்காளர் நீக்கம் தொடர்பாக ஆட்சேபனை மனுக்களை வழங்கி வருகின்றனர். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவும் ஏராளமானோர் விண்ணப்பித்து வருகின்றனர்.

இதன்படி, கடந்த 19 முதல் 21-ம் தேதி வரை அரசியல் கட்சிகளின் வாக்குச்சாவடி முகவர்கள் சார்பில் 2 லட்சத்து 51 ஆயிரத்து 248 ஆட்சேபனை மனுக்கள், பெயர்களை சேர்க்க 2 மனுக்கள் மாவட்ட தேர்தல் அதிகாரி அலுவலகங்களில் வழங்கப்பட்டுள்ளன. அதிகபட்சமாக திமுக சார்பில் 65 ஆயிரம் மனுக்கள், அதிமுக சார்பில் 63 ஆயிரம் மனுக்கள், பாஜக சார்பில் 54 ஆயிரம் மனுக்கள் வழங்கப்பட்டுள்ளன. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கக்கோரி 92,626 பேரும், பெயர் நீக்கம் தொடர்பாக 1007 பேரும் விண்ணப்பித்துள்ளனர். இத்திருத்தப்பணி வரும் ஜன.18-ம் தேதி வரை நடைபெற உள்ளது. பின்னர் பிப்ரவரி மாதம் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.

வாக்காளர் பட்டியலில் சேர்க்க 92,000 பேர் விண்ணப்பம்
திமுக தேர்தல் அறிக்கையில் என்ன இருக்கும்? - கனிமொழி தகவல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in