Published : 03 Dec 2016 09:42 AM
Last Updated : 03 Dec 2016 09:42 AM
இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணுவின் மனைவி ரஞ்சிதம் அம்மாள் உடல், ஸ்ரீவைகுண்டத்தில் நேற்று மாலை தகனம் செய்யப்பட்டது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி யின் மூத்த தலைவர் ஆர்.நல்ல கண்ணுவின் மனைவி ரஞ்சிதம் அம்மாள் சென்னையில் நேற்று முன்தினம் காலமானார். அவரது உடல், சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்துக்கு நேற்று அதிகாலை 5 மணியளவில் கொண்டுவரப்பட்டது. ஸ்ரீவைகுண்டம் புதுத் தெருவில் உள்ள வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் மகேந்திரன், வைகுண்டம் அதிமுக எம்எல்ஏ எஸ்.பி.சண்முக நாதன், தமிழ்நாடு காங்கிரஸ் மாநிலத் துணைத் தலைவர் ஏ.பி.சி.வி.சண்முகம், தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன், தியாகி கொடிக்கால் ஷேக் அப்துல்லா, இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலாளர் எஸ்.அழகு முத்துபாண்டியன் உள்ளிட்ட பல் வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
மாலை 4 மணியளவில் அவரது உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, வைகுண்டம் புதிய பாலம் அருகேயுள்ள மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. சிதைக்கு, நல்லகண்ணுவின் அண்ணன் மகன் பாரதி ராமநாதன் தீ மூட்டி னார். இறுதிச் சடங்கில் ஏராள மானோர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT