Published : 07 Dec 2022 04:08 AM
Last Updated : 07 Dec 2022 04:08 AM

சென்னை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் தயார் நிலையில் பேரிடர் மீட்பு குழு

சென்னை

சென்னை: அதிகனமழை எச்சரிக்கையை தொடர்ந்து, 10 மாவட்டங்களுக்கும் தேசிய, மாநில பேரிடர் மீட்பு படையினர் விரைந்துள்ளனர்.

இதுகுறித்து வருவாய் துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் நேற்று வெளியிட்ட அறிக்கை: அதிகனமழை எச்சரிக்கையை தொடர்ந்து, முதல்வர் அறிவுரையின் பேரில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

* தேசிய பேரிடர் மீட்பு படை மற்றும் தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையின் 10 குழுக்கள் நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், மயிலாடுதுறை, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய 10 மாவட்டங்களுக்கு விரைந்துள்ளன.

* சென்னையில் 169 நிவாரண மையங்களும், தாழ்வான பகுதிகளில் மழைநீரை வெளியேற்ற 805 நீர் இறைப்பான்களும் தயார் நிலையில் உள்ளன. 121 பல்நோக்கு பாதுகாப்பு மையங்கள், 5,093 நிவாரண முகாம்கள் அனைத்து மாவட்டங்களிலும் தயாராக உள்ளன.

* தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை முன்கூட்டியே மீட்டு நிவாரண முகாம்களில் தங்கவைக்க ஆட்சியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அணைகள், நீர்த்தேக்கங்களில் நீர் இருப்பு, நீர்வரத்தை தொடர்ந்து கண்காணிக்கவும், உபரிநீர் திறப்பின்போது மக்களுக்கு உரிய முன்னறிவிப்பு வழங்கவும் ஆட்சியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

* மாநில, மாவட்ட அவசரகால செயல்பாட்டு மையங்கள்24 மணி நேரமும் கூடுதல் அலுவலர்களுடன் இயங்குகின்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x