Published : 30 Nov 2022 12:00 PM
Last Updated : 30 Nov 2022 12:00 PM
சென்னை: தமிழகத்தில் நேற்று (நவ.29) வரை 26.04 லட்சம் மின் இணைப்புகள் ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
மின் இணைப்பு எண்ணினை ஆதாருடன் இணைக்க சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என்று தமிழக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்து இருந்தார். இதன்படி தமிழக மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் கீழ் உள்ள 2,811 பிரிவு அலுவலங்களிலும் நவ.28ம் தேதி முதல் டிச.31ம் தேதி வரை சிறப்பு முகாம்களை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இதன்படி கடந்த 2 நாட்களாக சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 26.04 லட்சம் மின் இணைப்புகள் ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியில்,இன்று (நவ.29) 2811 பிரிவு அலுவலகத்தில் நடைபெற்ற சிறப்பு முகாம்களில் 3.69 லட்சம் இணைப்புகளும், ஆன்லைனில் 3.11 லட்சம் இணைப்புகளும் இணைக்கப்பட்டிருக்கின்றன. இன்று வரை மொத்தம் 26.04 லட்சம் மின் இணைப்புகள் ஆதாருடன் இணைக்கப்பட்டிருக்கின்றன." இவ்வாறு அந்தப் பதிவில் கூறியுள்ளார்.
மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியில்,இன்று 2811 பிரிவு அலுவலகத்தில் நடைபெற்ற சிறப்பு முகாம்களில் 3.69 லட்சம் இணைப்புகளும், ஆன்லைனில் 3.11 லட்சம் இணைப்புகளும் இணைக்கப்பட்டிருக்கின்றன.
இன்று வரை மொத்தம் 26.04 லட்சம் மின் இணைப்புகள் ஆதாருடன் இணைக்கப் பட்டிருக்கின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!