Published : 02 Dec 2016 08:41 AM
Last Updated : 02 Dec 2016 08:41 AM
ரூபாய் நோட்டு தட்டுப்பாடு காரணமாக, மக்கள் தங்கம் வாங்குவது குறைந்துவிட்டதால், தங்கம் விலையும் குறைந்துள்ளது. சென்னையில் நேற்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.360 குறைந்து ரூ.22,096-க்கு விற்கப்பட்டது.
மத்திய அரசு 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று கடந்த மாதம் 8-ம் தேதி அறிவித் தது. அப்போது உடனடியாக பல ரும் அதிக அளவில் தங்கம் வாங் கியதாக கூறப்பட்டது. ஆனால் அதன்பிறகு, தங்கம் வாங்குவது வெகுவாக குறைந்துள்ளது. தங்கத்தின் தேவை குறைவதால், உள்ளூரில் விலையும் படிப்படி யாக குறைந்து வருகிறது.
சென்னையில் 22 கேரட் தங்கம் நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.2,807-க்கும், ஒரு பவுன் ரூ.22,456-க்கும் விற்கப்பட்டது. இந்நிலையில், நேற்று கிராமுக்கு ரூ.45 என பவுனுக்கு ரூ.360 குறைந்தது. இதனால், ஒரு கிராம் ரூ.2,762-க்கும், ஒரு பவுன் ரூ.22,096- க்கும் விற்கப்பட்டது. மக்களிடம் பணப்புழக்கம் குறைந்துள்ளதால், தங்கம் விலை குறைந்தபோதிலும், நகைக் கடைகளில் அவ்வளவாக கூட்டம் இல்லை.
விலை மேலும் குறையும்
சென்னை தங்கம், வைர வியாபாரிகள் சங்க பொதுச் செயலாளர் எஸ்.சாந்தகுமார் கூறும்போது, ‘‘மக்களிடம் பணப்புழக்கம் குறைந்து வரு கிறது. கையில் இருக்கும் ரொக் கத்தை அத்தியாவசியச் செல வுக்குப் பயன்படுத்துகின்றனர். இதனால், தங்கம் வாங்குவது குறைந்து வருகிறது. உள்ளூரில் தங்கத்தின் தேவை குறைவதால், விலையும் தொடர்ந்து குறைந்து வருகிறது. தங்கம் விலை மேலும் குறைய வாய்ப்பு உள்ளது’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT