Published : 13 Dec 2016 06:25 PM
Last Updated : 13 Dec 2016 06:25 PM

வார்தா புயல் பாதிப்பு: தமிழக நிலவரத்தை முதல்வரிடம் கேட்டறிந்தார் ஆளுநர்

'வார்தா' புயல் பாதிப்பு குறித்த தகவல்களை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திடம் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் தொலைபேசியில் கேட்டறிந்தார்.

மகாராஷ்டிர மாநிலத்தின் ஆளுநர் வித்யாசாகர் ராவ் தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக செப்டம்பம் மாதம் 2-ம் தேதி பொறுப்பேற்றார்.

தற்போது மகாராஷ்டிர சட்டப்பேரவைக் கூட்டம் நடந்துகொண்டிருப்பதால் ஆளுநர் விதயாசாகர் ராவ் மும்பையில் உள்ளார்.

இதனால் தமிழகத்தில் 'வார்தா' புயலால் ஏற்பட்ட தாக்கம் குறித்தும், பாதிப்பு குறித்தும் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திடம் தொலைபேசியில் கேட்டறிந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x