Last Updated : 20 Dec, 2016 04:36 PM

 

Published : 20 Dec 2016 04:36 PM
Last Updated : 20 Dec 2016 04:36 PM

சில்லறை வணிகர்களை ஒழிக்க சதி: பண அட்டைகளை எரித்து தமிழ்நாடு வணிகர் சங்கம் போராட்டம்

பணமில்லாத பரிவர்த்தனை என்ற பெயரில் மத்திய அரசு, சில்லரை வணிகர்களை ஒழிக்க நினைக்கிறது என்று கூறி, தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரவையினர் பண அட்டை மாதிரிகளைத் தீயிட்டு எரித்தனர்

இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

''அந்நிய முதலீடு, ஆன்லைன் வணிகம், உணவு பாதுகாப்பு தர நிர்ணயச் சட்டம் உள்ளிட்ட மத்திய அரசின் அனைத்து நடவடிக்கைகளும் பெரு வணிக நிறுவனங்களுக்கே சாதகமாக இருக்கிறது.

ரொக்க பரிவர்த்தனையைத் தவிருங்கள்; கடன் அட்டையைப் பயன்படுத்துங்கள் என்கிற அறிவிப்புகள் வணிகர்களுக்கு எதிரானவை.

நம் நாட்டின் சில்லரை வணிகத்தை முழுமையாக ஒழித்துவிட மத்திய அரசு பயன்படுத்தும் கடைசி ஆயுதமே கார்டு கலாச்சாரம். இதைத் தடுக்கவே கடன் அட்டைகளை தீக்கிரையாக்குகிறோம்'' என்று கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x