Published : 31 Dec 2016 09:13 AM
Last Updated : 31 Dec 2016 09:13 AM

தொலைதூரக்கல்வி படிப்புக்கு விண்ணப்பிக்க ஜன. 16 வரை அவகாசம்: இக்னோ பல்கலைக்கழகம் அறிவிப்பு

மத்திய அரசு பல்கலைக்கழகமான இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் (இக்னோ) 2017 ஜனவரி பருவத்தில் இளநிலை, முதுநிலை, பட்டயம், சான்றிதழ் படிப்புகளில் சேருவதற்கான கடைசி தேதி டிசம்பர் 30-ம் தேதி என்று முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், மாணவர்கள் நலனைக் கருத்தில்கொண்டு தொலைதூரக்கல்வி படிப்புகளில் சேருவ தற்கான கடைசி தேதி ஜனவரி 16-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருப்பதாக ‘இக்னோ’ பல்கலைக்கழக சென்னை மண்டல இயக்குநர் எஸ்.கிஷோர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x