Published : 16 Nov 2016 08:09 AM
Last Updated : 16 Nov 2016 08:09 AM

உள்ளாட்சி தேர்தலுக்கான தடை மேலும் 3 வாரங்களுக்கு நீட்டிப்பு

தமிழக உள்ளாட்சி தேர்தலுக்கு விதிக்கப்பட்ட தடையை மேலும் 3 வாரங்களுக்கு நீட்டித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.

உள்ளாட்சி தேர்தலில் பழங் குடி இனத்தவர்களுக்கான இட ஒதுக்கீடு முறையாக பின்பற்றப்பட வில்லை எனக்கூறி திமுக அமைப் புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி என்.கிருபாகரன், தமிழகத்தில் இரு கட்டங்களாக நடைபெறவிருந்த உள்ளாட்சி தேர்தலை கடந்த அக்டோபர் 4-ம் தேதி ரத்து செய்து உத்தரவிட்டார். மேலும் உள்ளாட்சி தேர்தலை டிசம்பர் இறுதிக்குள் நடத்தி முடிக்கவும், இந்த தேர்தலில் குற்றப் பின்னணி உள்ளவர்கள் போட்டியிடாத வகையில் தடை செய்யவும் மாநில தேர்தல் ஆணையத்துக்கும் உத்தர விட்டார்.

இந்நிலையில் தனி நீதிபதி பிறப் பித்த இந்த உத்தரவை எதிர்த்து மாநில தேர்தல் ஆணையம் சார்பில் அதன் செயலாளர் டி.எஸ். ராஜசேகர், உயர் நீதிமன்றத் தில் மேல் முறையீடு மனுதாக்கல் செய்தார்.

இந்த மனுக்கள் மீதான விசா ரணை ஏற்கெனவே நீதிபதிகள் ஹூலுவாடி ஜி.ரமேஷ் மற்றும் வி.பார்த்திபன் ஆகியோர் அடங் கிய அமர்வில் நடந்த போது திமுக தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், நேற்று இதே அமர்வில் திமுக மூத்த வழக்கறிஞர் முறையீடு செய்தார். அப்போது தேர்தல் ஆணையம் சார்பில் 27 பக்கத்துக்கு கூடுதல் மனு தாக்கல் செய்யப்பட்டது. ‘‘இந்த கூடுதல் மனுவைப் படித்துப் பார்த்து பதிலளிக்க எங்களுக்கு 3 வாரம் காலஅவகாசம் தேவை. மேலும் இடஒதுக்கீடு தொடர் பாக எங்களிடம் உள்ள ஆவணங் களையும், எந்தெந்த பதவிகளுக்கு இடஒதுக்கீடு வழங்கவி்ல்லை என்பது தொடர்பான புகாரையும் மாநில தேர்தல் ஆணையத்துக் கும், தமிழக அரசுக்கும் வழங்கவுள் ளோம். ஆகவே இந்த வழக்கு விசாரணையை தள்ளி வைக்க வேண்டும்’’ என கோரினார்.

இதையடுத்து, உள்ளாட்சி தேர்தலுக்கு தனி நீதிபதி விதித்த தடையை மேலும் 3 வாரங்களுக்கு நீட்டித்த நீதிபதிகள், அதற்குள் மனுதாரர் தரப்பிலும் பதிலளிக்க உத்தரவி்ட்டு விசாரணையை தள்ளி வைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x