Published : 23 Nov 2016 09:46 AM
Last Updated : 23 Nov 2016 09:46 AM

எழும்பூர் சேலம் விரைவு ரயிலில் பெட்டிகள் வரிசை மாற்றம்

சென்னை எழும்பூரில் இருந்து சேலத்துக்கு இயக்கப்படும் விரைவு ரயிலில் எஸ்-1 முதல் எஸ்-9 வரையிலான ரயில் பெட்டிகள் இணைக்கப்பட்டு இயக்கப்படுகிறது. இதில், மேட்டூர் டேம் வரை செல்லும் எஸ்-9 பெட்டி மட்டும் இன்ஜினுக்கு பக்கத்தில் இணைக்கப்படும். அதைத் தொடர்ந்து, எஸ்-1 முதல் எஸ்-8 எண் வரையிலான பெட்டிகள் இணைக்கப்படுவது வழக்கம். இது பயணிகள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியது.

இதையடுத்து, மேட்டூர் டேம் செல்லும் எஸ்-9 பெட்டியும், அதைத் தொடர்ந்து எஸ்-8 முதல் எஸ்-1 என்ற வரிசையில் பெட்டிகளை இணைக்க முடிவு செய்யப்பட்டது. 20-ம் தேதி முதல் இந்த வரிசையில் பெட்டிகள் இணைக்கப்பட்டு வருகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x