Published : 21 Oct 2022 07:27 AM
Last Updated : 21 Oct 2022 07:27 AM

தீபாவளி பண்டிகையையொட்டி கூடுதல் மெட்ரோ ரயில்கள் இயக்கம்

சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மெட்ரோ ரயில் நிறுவனம் இன்றும், நாளையும் (அக்.21, 22) நெரிசல்மிகுந்த நேரங்களில் கூடுதல் ரயில்களை இயக்குகிறது. சென்னை மெட்ரோ ரயில் சேவையை பொறுத்தவரை, நெரிசல் மிகுந்த மாலை நேரங்களில் 5 முதல் இரவு 8 மணிவரை 5 நிமிட இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படுகிறது. இந்நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பயணிகள் வசதிக்காக இன்றும், நாளையும் (அக்.21, 22) மெட்ரோ ரயில் சேவை மாலை 5 முதல் இரவு 10 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர, மாலை 5 முதல் இரவு 8 மணி வரை 5 நிமிடஇடைவெளியில் இயக்கப்பட்டு வரும் மெட்ரோ ரயில்சேவைகள், அக்.21, 22-ம் தேதிகளில் மட்டும் 5 நிமிடத்துக்கும் குறைவான இடைவெளியில் இயக்கப்படும். இத்தகவலை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x