Published : 20 Oct 2022 12:39 PM
Last Updated : 20 Oct 2022 12:39 PM

பெயர் விடுப்பட்ட டெல்டா விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு பெற்றுத்தர வேண்டும்: தினகரன்

தினகரன் | கோப்புப் படம்

சென்னை: மழையால் பாதிக்கப்பட்டு, பட்டியலில் பெயர் விடுப்பட்டுள்ள டெல்டா விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு பெற்றுத்தர அரசு நட வடிக்கை எடுக்க வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்: "பயிர்க்காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இழப்பீடு பெறுவதில் டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகளின் பெயர் விடுபட்டிருப்பதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

தமிழக அரசு உடனடியாக இப்பிரச்னையைக் கவனித்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு பெற்றுத்தர வேண்டும். ஆட்சிப் பொறுப்பை ஏற்றதிலிருந்தே வேளாண் பயிர்க்காப்பீட்டில் அலட்சியம் காட்டி வரும் திமுக அரசு, இதிலும் கோட்டை விட்டுவிடக்கூடாது." என்று கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x