Published : 17 Nov 2016 09:22 AM
Last Updated : 17 Nov 2016 09:22 AM

பேருந்தில் மூதாட்டியிடம் ரூ.2.5 லட்சம் கொள்ளை

சென்னையில் மாநகரப் பேருந்தில் சென்றபோது மூதாட்டியிடம் ரூ.2.5 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது.

மண்ணடி அய்யர் தெருவைச் சேர்ந்தவர் தனலட்சுமி (63). நேற்று பகல் சுமார் 11 மணி அளவில் தங்கசாலையில் இருந்து பிராட்வேக்கு 32பி பேருந்தில் சென்றார். தனது கைப்பையில் ரூ.2.5 லட்சம் பணத்தை வைத்திருந்தார்.

பிராட்வேயில் இறங்கி பணத்தை வங்கியில் டெபாசிட் செய்ய சென்றார். கையில் இருந்த பை கிழிக்கப்பட்டு பணம் கொள்ளை அடிக்கப்பட்டிருந்த தால் அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி எஸ்பிளனேடு போலீஸில் அவர் புகார் அளித்தார். அந்த புகாரின்படி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x