Published : 05 Nov 2016 10:43 AM
Last Updated : 05 Nov 2016 10:43 AM
ஆயிரம் விளக்கு பகுதியைச் சேர்ந்தவர் அப்பு என்ற அப்புராஜா (38). 2011-ல் எழும்பூரில் நடந்த கொலை வழக்கு ஒன்றில் சிக்கி ஆயுள் கைதியாக புழல் மத்திய சிறையில் அடைக்கப் பட்டுள்ளார்.
நேற்று முன்தினம் இரவு சக கைதிகளுடன் உணவருந்தி கொண்டு இருந்தபோது திடீரென தயாராக வைத்திருந்த குண்டூசிகளை உணவுடன் கலந்து சாப்பிட்டார். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சக கைதிகள் இது குறித்து, சிறைத்துறை அதிகாரிகளுக்கு உடனடியாக தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து பார்த்தபோது அப்புராஜா மயங்கி கிடந்தார்.
இதைத் தொடர்ந்து அவரை மீட்ட சிறைத்துறை அதிகாரிகள் முதல் உதவி அளித்து விட்டு, மேல் சிகிச் சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு கைதிகளுக்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முதல்கட்டமாக ஸ்கேன் உள்ளிட்ட பரிசோதனைகள் நடந்துள்ளன. உயிருக்கு ஆபத்து இல்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே, சுவாதி கொலை யில் கைது செய்யப்பட்ட ராம்குமார் மின் ஒயரை கடித்து தற்கொலை செய்து கொண்டார். அதே பாணியில் டில்லிராஜா என்ற கைதியும் தற் கொலைக்கு முயன்றார். தற்போது மேலும் ஒரு சிறை கைதி குண்டூசி களை உணவுடன் சாப்பிட்டுத் தற்கொலைக்கு முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT