Published : 10 Oct 2022 06:13 AM
Last Updated : 10 Oct 2022 06:13 AM

தமிழகத்தின் 26 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

(கோப்புப்படம்)

சென்னை: மதுரை, கோவை, திருச்சி, சேலம், டெல்டா உள்ளிட்ட 26 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

வட இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, அக். 10, 11, 12-ம் தேதிகளில் தமிழகம், புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களிலும், 13-ம் தேதி ஒருசில இடங்களிலும் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அக். 10-ம் தேதி (இன்று) நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, கரூர், நாமக்கல், சேலம், திண்டுக்கல், மதுரை, தேனி, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், தென்காசி, புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர் ஆகிய 26 மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

அக். 11-ம் தேதி (நாளை)நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, கரூர், நாமக்கல், சேலம், தேனி, திண்டுக்கல், மதுரை, திருச்சி, வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

அக். 12-ம் தேதி நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, கடலூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்கள், புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

அக். 13-ம் தேதி நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம், தருமபுரி, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

அக். 9-ம் தேதி (நேற்று) காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில், ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர், தஞ்சாவூர் மாவட்டம் பூதலூரில் 9 செ.மீ., ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம், ஆர்.எஸ்.மங்கலம், விருதுநகர் மாவட்டம் சிவகாசியில்7 செ.மீ., விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி, தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி, மதுரை தெற்கு, ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி, திருவள்ளூர் மாவட்டம்ஆர்.கே.பேட்டையில் 6 செ.மீ. மழை பெய்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x