Published : 11 Nov 2016 08:25 AM
Last Updated : 11 Nov 2016 08:25 AM
மூன்று தொகுதிகள் தேர்தல் தொடர் பாக ஆலோசனை நடத்த தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி டெல்லி சென்றார்.
தமிழகத்தில் அரவக்குறிச்சி, தஞ்சை, திருப்பரங்குன்றம் சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு வரும் 19-ம் தேதி தேர்தல் நடக்கிறது. தேர் தல் பணிகள் தொடர்பாக ஆய்வு செய்ய துணைத் தேர்தல் ஆணையர் உமேஷ் சின்கா, இயக்குநர் ஜெனரல் (செலவினம்) திலீப் சர்மா ஆகியோர் 9-ம் தேதி தமிழகம் வருவதாக இருந்தது. அதன்பின் அவர்கள் 14-ம் தேதி வருவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே அரவக்குறிச்சி, தஞ்சை உள்ளிட்ட தொகுதிகளுக்கு கூடுதலாக செலவின பார்வை யாளர்களைத் தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. இந்நிலையில் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி, நேற்று திடீரென டெல்லி புறப்பட்டுச் சென்றார். 3 தொகுதி தேர்தல் தொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணையர் நசிம் ஜைதி மற்றும் தேர்தல் ஆணையர்களுடன் லக்கானி விவாதிக்க உள்ளதாக தேர்தல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT