Published : 11 Nov 2016 08:25 AM
Last Updated : 11 Nov 2016 08:25 AM

தலைமை தேர்தல் அதிகாரி திடீர் டெல்லி பயணம்

மூன்று தொகுதிகள் தேர்தல் தொடர் பாக ஆலோசனை நடத்த தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி டெல்லி சென்றார்.

தமிழகத்தில் அரவக்குறிச்சி, தஞ்சை, திருப்பரங்குன்றம் சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு வரும் 19-ம் தேதி தேர்தல் நடக்கிறது. தேர் தல் பணிகள் தொடர்பாக ஆய்வு செய்ய துணைத் தேர்தல் ஆணையர் உமேஷ் சின்கா, இயக்குநர் ஜெனரல் (செலவினம்) திலீப் சர்மா ஆகியோர் 9-ம் தேதி தமிழகம் வருவதாக இருந்தது. அதன்பின் அவர்கள் 14-ம் தேதி வருவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே அரவக்குறிச்சி, தஞ்சை உள்ளிட்ட தொகுதிகளுக்கு கூடுதலாக செலவின பார்வை யாளர்களைத் தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. இந்நிலையில் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி, நேற்று திடீரென டெல்லி புறப்பட்டுச் சென்றார். 3 தொகுதி தேர்தல் தொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணையர் நசிம் ஜைதி மற்றும் தேர்தல் ஆணையர்களுடன் லக்கானி விவாதிக்க உள்ளதாக தேர்தல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x