Last Updated : 02 Nov, 2016 12:24 PM

 

Published : 02 Nov 2016 12:24 PM
Last Updated : 02 Nov 2016 12:24 PM

கடலோர தமிழகத்தில் மழை வாய்ப்பு: தமிழ்நாடு வெதர்மேன்

வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து சென்னை நகரில் முதன்முறையாக இன்று (நவ.2) பரவலாக பல பகுதிகளிலும் கணிசமான அளவு மழை பெய்துள்ளது.

*

தற்போது நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலையானது இன்று மேலும் வலுப்பெற்று தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்புள்ளது.

இதன் காரணமாக கடலோர தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பிருக்கிறது. காற்று இடஞ்சுழியாக சுழல்வதால் சென்னை உட்பட தமிழகம் முழுவதும் கடலோர மாவட்டங்களில் இன்று நாள் முழுவதும் விட்டுவிட்டு மழை பெய்வதற்கான வாய்ப்பிருக்கிறது.

சென்னை நகரைப் பொறுத்தவரை, இன்றைக்கு பலத்த மழைக்கு வாய்ப்பில்லை. இருப்பினும் விட்டுவிட்டு மழை பெய்யும்.

*

தமிழகத்தின் பிற பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி, மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, திண்டுக்கல், சிவகங்கை மாவட்டங்களில் இன்று மழை பெய்யும். திருவள்ளூர் முதல் டெல்டா பகுதிவரை விட்டுவிட்டு மழை பெய்யும்.

- >'தமிழ்நாடு வெதர்மேன்' பிரதீப் ஜான்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x