Published : 21 Nov 2016 09:24 AM
Last Updated : 21 Nov 2016 09:24 AM

நாட்டில் நெருக்கடி நிலை அச்சம்: திருமாவளவன் கருத்து

500, 1000 ரூபாய் நோட்டுகளை செல் லாதவையாக அறிவித்திருப்பது, நாட்டில் அரசியல் ரீதியான அவரச நெருக்கடி நிலைக்கு கொண்டு செல்லும் என்ற அச்சத்தை ஏற் படுத்தியுள்ளதாக விடுதலை சிறுத் தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.

புதுக்கோட்டையில் அவர் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பிரதமரின் பண விவகார நடவடிக்கை பொருளாதாரத்தில் தள்ளாடும் நிலையை ஏற்படுத்தி உள்ளதையும் தாண்டி, நாட்டின் அரசியல் அமைப்பு சட்டத்துக்கும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, செல்லாத நோட்டுகள் என அறிவிக்கப்பட்டதை திரும்பப் பெற வலியுறுத்தி வரும் 23-ம் தேதி மதுரையில் என் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பால், கோடிக்கணக்கில் கறுப்புப் பணத்தை பதுக்கி வைத் திருந்தவர்கள் கமிஷன் அடிப் படையில் பணத்தை மாற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். ஆனால், எங்கும் கறுப்புப் பணமோ, பதுக்கப்பட்டுள்ள சொத்துகளோ மீட்கப்படவில்லை.

நாட்டு நலனை பாதுகாக்க வேண்டும் என்ற அக்கறையில் தான் காங்கிரஸ் கட்சி நடத்தும் நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள் கிறோம் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x