Published : 19 Nov 2016 09:05 AM
Last Updated : 19 Nov 2016 09:05 AM
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள உலைப்பட்டியை சேர்ந்த 5 சிறுவர்கள் மீது எம்.கல்லுப்பட்டி போலீஸார் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்யவும்,சிறுவர் கள் மீது வழக்கு பதிவு செய்த போலீ ஸார் மீது நடவடிக்கை எடுக்கவும், சம்பந்தப்பட்ட சிறுவர்களுக்கு இழப்பீடு வழங்கவும் வேண்டுமென கோரி மதுரை யைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் உயர் நீதிமன்ற கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்தார்.
அந்த வழக்கின் பேரில் அனைத்து ஊடகங்களுக்கும் நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்களி்ன் பெயர்களை பிரசுரிக்கக் கூடாது என மதுரை உயர் நீதிமன்ற பதிவாளர் சுற்றறிக்கை அனுப்பி வைத்தார்.
இந்த சுற்றறிக்கையை எதிர்த்து பத்திரிகை யாளர்கள் சார்பில் உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் மற்றும் நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது. மனுதாரர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர் ஏ.சிராஜூதீன் ஆஜராகி வாதிட்டார்.
மனு வாபஸ் பெற அனுமதி
அப்போது நீதிபதிகள், ‘‘இந்த உத்தரவு சுய விளம்பரத்துக்காக பொதுநல வழக்கு தொடர்பவர்களை ஊக்கப்படுத்தாமல் இருப் பதற்காக பிறப்பிக்கப்பட்டது. அதன் அடிப் படையில் உயர் நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்த சுற்றறிக்கை ஊடகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட சாதாரண ஒரு அறி வுரைதானே தவிர, தடை கிடையாது. எனவே மனுவை வாபஸ் பெற அனுமதிக்கிறோம். மனு தள்ளுபடி செய்யப்படுகிறது’’ என உத்தரவிட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT