Published : 14 Sep 2022 07:55 AM
Last Updated : 14 Sep 2022 07:55 AM

பொறியியல் படிப்பு பொதுப்பிரிவு கலந்தாய்வு: 11,595 மாணவர்களுக்கு முதல்சுற்றில் இடங்கள் ஒதுக்கீடு

சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் 431 பொறியியல் கல்லூரிகளில் இளநிலைப் படிப்புகளுக்கு ஒரு லட்சத்து 48,811 இடங்கள் உள்ளன. இவற்றை நிரப்புவதற்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, கடந்த ஆகஸ்ட் 20-ம்தேதி தொடங்கியது.

முதல்கட்டமாக மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்டோர் அடங்கிய சிறப்புப் பிரிவுக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 20 முதல் 24-ம் தேதி வரை நடத்தப்பட்டது. இதில் 668 மாணவர்களுக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டன.

அதன்பின் பொதுப்பிரிவு கலந்தாய்வு செப்டம்பர் 10-ம் தொடங்கிநடைபெற்று வருகிறது. இதில் முதல்சுற்றில் பங்கேற்க தரவரிசையில் 1 முதல் 14,524 வரையுள்ள மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதில் 12,294 மாணவர்கள் கலந்துகொண்டு கல்லூரிகளை தேர்வு செய்தனர். அவர்களில் 11,595 பேருக்கு தற்காலிகமாக இடங்கள் ஒதுக்கப்பட்டன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x