Published : 24 Oct 2016 09:39 AM
Last Updated : 24 Oct 2016 09:39 AM
தீபாவளி பண்டிகையையொட்டி, காட்டாங்கொளத்தூர் சிவா னந்தா சரஸ்வதி சேவாஸ்ரம குருகுலத்தில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் கல்வித் துறை அமைச்சர் பாண்டிய ராஜனுடன் அவரது மனைவி லதா பாண்டியராஜன் கலந்து கொண்டு 250 ஆதரவற்ற குருகுல குழந்தைகள் மற்றும் முதியவர்களுடன் தீபாவளி கொண்டாடினார்.
அவர்களுக்கு ஆடைகளையும், இனிப்புகளை யும் அவர் வழங்கினார். அதே போல் 60 முதியோர்களுக்கும் பொருட்களை வழங்கினார்.
நிகழ்ச்சியில் ஆசிரம நிர்வாகச் செயலர் லட்சுமி ராஜராம், எம்பி மரகதம் குமரவேல், மறைமலை நகர் நகராட்சி தலைவர் கோபி கண்ணன் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT