Published : 17 Oct 2016 07:57 AM
Last Updated : 17 Oct 2016 07:57 AM
நடிகர் ரஜினிகாந்த் தனது மகள் ஐஸ்வர்யா தனுஷுடன் அப் போலோ மருத்துவமனைக்கு வந்து அமைச்சர்கள் மற்றும் மருத் துவர்களை சந்தித்து முதல்வரின் உடல்நிலை குறித்து விசாரித்தார்.
உடல்நலக் குறைவால் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதல்வர் ஜெயலலிதாவுக்கு கடந்த 25 நாட் களாக தீவிர சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது. பல்வேறு அரசி யல் கட்சிகளின் தலைவர்கள், ஆளுநர்கள், மத்திய அமைச்சர் கள், வெளிமாநில அமைச்சர்கள், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள், திரையுலகினர் உள்ளிட்டோர் தினமும் அப்போலோ மருத்துவ மனைக்கு வந்து முதல்வரின் உடல்நலம் குறித்து விசாரித்துச் செல்கின்றனர்.
இந்நிலையில், நடிகர் ரஜினி காந்த் தனது மகள் ஐஸ்வர்யா தனுஷுடன் நேற்று மாலை 6.15 மணிக்கு அப்போலோ மருத்துவ மனைக்கு வந்தார். அங்கிருந்த அமைச்சர்கள், மருத்துவர்களை சந்தித்து முதல்வரின் உடல்நலம் குறித்து விசாரித்தார். முதல்வரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாகவும், அவர் விரைவில் பூரண குணமடைந்து விடுவார் என்றும் ரஜினியிடம் அமைச்சர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது. பின்னர் ரஜினியும் ஐஸ்வர்யாவும் மாலை 6.45 மணிக்கு புறப்பட்டுச் சென்றனர்.
அதிமுக செய்தித் தொடர் பாளர் சி.ஆர்.சரஸ்வதி, நிருபர் களிடம் கூறும்போது, ‘‘முதல்வரின் உடல்நிலையில் நல்ல முன்னேற் றம் ஏற்பட்டு வருகிறது. அவர் வேகமாக குணமடைந்து வரு கிறார். டாக்டர்களின் தொடர் சிகிச்சை நல்ல பலனை அளித்துள் ளது. முதல்வர் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்புவார்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT