Published : 16 Aug 2022 01:17 PM
Last Updated : 16 Aug 2022 01:17 PM

பொறியியல் தரவரிசை: 200-க்கு 200 கட் ஆஃப் பெற்ற 133 மாணவர்கள்

சென்னை: பொறியியல் தரவரிசை பட்டியலில் 133 பேர் 200-க்கு 200 கட் - ஆப் பெற்றுள்ளனர்.

2022-ம் ஆண்டுக்கான பொறியியல் தரவரிசைப் பட்டியலை உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று வெளியிட்டார். விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட சிறப்புப் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு வரும் 20-ம் தேதி முதல் தொடங்கும் என்று அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.

இதில் பொதுப் பிரிவில் 1,56,278 மாணவர்களுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் 133 பேர் 200க்கு 200 கட் - ஆப் பெற்றுள்ளனர். 468 பேர் 199 முதல் 200 வரையும், 3,023 பேர் 195 முதல் 199 வரையும் கட் - ஆப் பெற்றுள்ளனர். இதில் ரஞ்சிதா, ஹரிணிகா, லோகேஷ் கண்ணன் ஆகியோர் முதல் 3 இடங்களை பெற்றுள்ளனர்.

அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டின் கீழ் 22 ஆயிரத்து 587 மாணாக்கர்களுக்கு தரவரிசை எண் வழங்கப்பட்டுள்ளது. இதில் பிருந்தா, ரோகித், அனிதா ஆகியோர் முதல் 3 இடங்களை பிடித்துள்ளனர்.

விளையாட்டுப் பிரிவில் 1258 மாணாக்கருக்கு தரவரிசை எண் வழங்கப்பட்டுள்ளது. இதில் மமதிஷியா, கார்த்திகேயனி, ரிஷப் ஆகியோர் முதல் 3 இடங்களை பிடித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x