Published : 09 Oct 2016 05:24 PM
Last Updated : 09 Oct 2016 05:24 PM
தனித்திறன், அறிவு பெருக்கம் மற்றும் தொழில்முனைவுத்திறன் ஆகியவற்றை மேம்படுத்தி, இந்தியாவை முதன்மை நாடாக மாற்றுங்கள் என ஆளுநர் வித்யாசாகர் ராவ் ஆயுதபூஜை, விஜயதசமி வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ''ஆயுதபூஜை என்பது பணியிடத்து கருவிகள், பணியிடங்களை வழிபடுவதாகும். விஜயதசமி என்பது தீமையை அழித்து நன்மையை உருவாக்குவதும், அறிவு சுடர்விடுவதும், கல்வித்தொடக்கத்துக்கும் உகந்த நாளாகும்.
இந்த சிறப்பான நாட்களில், தனித்திறன், அறிவு மற்றும் புதிய தொழில்களை தொடங்குவதற்கான திறன்களை வளர்த்து இந்தியாவை உலகளவில் முதன்மை நாடாக்க வேண்டும்.
தமிழகம், ஆந்திரா, தெலங்கானா மற்றும் மகாராஷ்டிர மற்றும் நாட்டின் இதர பகுதிகளில் வாழும் மக்களுக்கு எனது ஆயுதபூஜை மற்றும் விஜயதசமி வாழ்த்துக்கள்'' என்று ஆளுநர் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT