Published : 09 Oct 2016 09:50 AM
Last Updated : 09 Oct 2016 09:50 AM
ரெப்கோ வங்கியின் இயக்குநராக இருப்பவர் வரதராஜன். அடையாறு காந்தி நகரில் உள்ள இவரது வீட்டில் சிபிஐ அதிகாரிகள் நேற்று மாலை முதல் இரவு முழுவதும் சோதனை மேற்கொண்டனர். இதேபோல ரெப்கோ வங்கியின் செயல் இயக்குநர் ரகு, வங்கியின் தியாகராய நகர் கிளை மேலாளர் சேகர், அசோக் நகர் கிளை மேலாளர் கண்ணன் ஆகியோரின் வீடுகளிலும் சிபிஐ அதிகாரிகள் நேற்று சோதனை மேற்கொண்டனர். இதில், ரகு வெளிநாட்டில் இருப்பதால் அவரது வீட்டுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, வீட்டுக் கடன் வழங்குதல், வங்கி சார்ந்த நடவடிக்கைகளில் முறைகேடு ஆகிய புகார்களின் அடிப்படையில் சோதனை நடப்பதாக தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT