Published : 06 Aug 2022 11:13 AM
Last Updated : 06 Aug 2022 11:13 AM

75-வது சுதந்திர தினம்: சென்னையில் முதல்நாள் அணிவகுப்பு ஒத்திகை

சென்னை: நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை கோட்டை கொத்தளம் எதிரே முதல்நாள் பாதுகாப்பு அணிவகுப்பு ஒத்திகை இன்று (ஆக.6) நடைபெற்றது.

75-வது சுதந்திர தினவிழா வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி சென்னை கோட்டை கொத்தளத்தில் நடைபெறவுள்ளது. இந்த விழாவில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரண்டாவது ஆண்டாக தேசிய கொடியை ஏற்றி வைக்கவுள்ளார். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

மூன்றுநாள் ஒத்திகை நிகழ்ச்சி: சுதந்திர தின விழாவில், காவல்துறை உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு துறைகளின் சார்பில் நடைபெறும் அணிவகுப்பு நிகழ்ச்சி இடம்பெறும். இதற்கான அணிவகுப்பு முதல்நாள் அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

இரண்டாவது ஒத்திகை வரும் வரும் ஆக.9-ம் தேதியும், இறுதி ஒத்திகை அணிவகுப்பு நிகழ்ச்சி வரும் ஆக.13-ம் தேதியும் நடைபெறவுள்ளன. இன்று காலாட்படை, காமண்டோ படை, பெண்கள் படை உள்பட காவல்துறையின் 7 படைகளின் அணிவகுப்பு மற்றும் உதிரிப்படைகளின் அணிவகுப்பு ஒத்திகைகளும் நடைபெற்றன.

பொதுமக்கள் அனுமதி? - கடந்த ஆண்டு கரோனா தொற்றுப் பரவல் காரணமாக சுதந்திர தினவிழா நிகழ்ச்சிகளில் பொதுமக்கள் பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை. இந்த ஆண்டு கரோனாவின் தாக்கம் சற்று குறைந்துள்ளதால், குழந்தைகளைத் தவிரத்து பெரியவர்கள் அனுமதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

போக்குவரத்து மாற்றம்: சுதந்திர தின அணிவகுப்பு ஒத்திகை காலை 6.30 மணி முதல் காலை 10 மணி வரை நடைபெறும். இந்த நாட்களில் அந்தப் பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x