Published : 06 Oct 2016 07:53 AM
Last Updated : 06 Oct 2016 07:53 AM
சென்னை விமான நிலை யத்துக்கு குவைத்தில் இருந்து நேற்று அதிகாலை 3.30 மணிக்கு விமானம் ஒன்று வந்தது. பயணிகளை சுங்கத் துறை அதிகாரிகள் பரி சோதனை செய்து அனுப் பிக் கொண்டிருந்தனர். அப் போது வந்த கிருஷ்ணவேணி என்பவரை சோதனை செய்த தில், அவர் ஆடைக்குள் 900 கிராம் எடையுள்ள தங்கக் கட்டிகள் மறைத்து வைத்திருப்பது தெரியவந்தது. நள்ளிரவில் கோலாலம்பூரில் இருந்து வந்த சிவராமன் என்பவரிடம் இருந்து 800 கிராம் தங்கக் கட்டிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இருவரிடம் இருந்து தங்கக் கட்டிகளைப் பறிமுதல் செய்த அதிகாரிகள், இருவரையும் கைது செய்தனர்.
இதேபோல் நள்ளிரவில் சிங்கப்பூரில் இருந்து வந்த முகமது என்பவரிடம் முறை யான ஆவணங்கள் இன்றி இருந்த ரூ.23 லட்சம் (இந்திய மதிப்பு) வெளிநாட்டு பணத்தை பறிமுதல் செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT