Published : 07 Oct 2016 02:03 PM
Last Updated : 07 Oct 2016 02:03 PM

தமிழக மீனவர்களுக்கு பாதுகாப்பு கோரிய மனு தள்ளுபடி

தமிழக மீனவர்களுக்குப் பாதுகாப்பு வழங்க கடலோர காவல் படைக்கு உத்தரவிடக் கோரிய மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

சிவகாசியைச் சேர்ந்த வழக்கறிஞர் ஆனந்தமுருகன், உயர் நீதிமன்றக் கிளையில் கடந்த 2014-ல் தாக்கல் செய்த பொதுநல மனு: கடலில் மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். படகுகளைப் பறி முதல் செய்கின்றனர். இந்த சம்ப வம் தொடர்பாக 253 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதனால் தமிழக மீனவர் களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்கு வதற்காக இந்திய - இலங்கை கடல் எல்லையில் தமிழக கட லோர காவல்படையின் ரோந்து கப்பலை நிறுத்தவும், மீனவர் களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் உத்தரவிட வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

இதற்கிடையே, தமிழக மீனவர் கள் பாதுகாப்பு தொடர்பாக உயர் நீதிமன்ற அமர்வு ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவை நிறைவேற் றாத மத்திய அரசு அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரியும் தனி மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுக்கள் நேற்று விசா ரணைக்கு வந்தன. இந்த வழக் கில் இந்திய கடலோர காவல் படையின் துணை இயக்குநர் ஜெனரல் கே.ஆர்.நாட்டியால் ஏற்கெனவே தாக்கல் செய்த பதில் மனுவில், “இந்திய கடல் எல்லையில் தமிழக மீனவர்களின் உயிருக்கும், உடைமைக்கும் போதிய பாதுகாப்பு வழங்கப்படு கிறது. தமிழக மீனவர்கள் இலங்கை கடல் எல்லையில் நுழையும்போது அதற்கு இந்திய கடலோர காவல்படை பொறுப்பேற்க முடியாது. இந்திய - இலங்கை கடல் எல்லையைத் தாண்டாமல் இருக்குமாறு தமிழக மீனவர்களை எச்சரிக்க வேண்டும். மீனவர்கள் பாதுகாப்பு தொடர்பாக உயர் நீதிமன்ற அமர்வு ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவு நிறைவேற்றப்பட்டுள்ளது. நீதி மன்ற அவமதிப்பில் ஈடுபட வில்லை. எனவே மனுக்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும்” என தெரிவித்திருந்தார்.

இதைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x