Published : 03 Oct 2016 09:36 AM
Last Updated : 03 Oct 2016 09:36 AM

விளை நிலங்களை அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளாக மாற்ற விதித்த தடையை நீக்கக்கோரி வழக்கு

விளைநிலங்களை அங்கீகாரமில் லாத வீட்டு மனைகளாக மாற்றி பத்திரம் பதிய இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் கடந்த செப்டம்பர் 9-ம் தேதி உத்தரவிட்டது.

இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி அகில இந்திய ரியல் எஸ்டேட் வணிகர்கள், ஏஜென்ட்கள் மற்றும் ஊழியர்கள் நலச்சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது:

வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் தாக்கல் செய்த வழக்கில் எங்களையும் ஒரு இடையீட்டு மனுதாரர்களாக சேர்க்க வேண்டும். காளான்போல பெருகிவிட்ட அங்கீகாரமில்லாத வீ்ட்டு மனைகளை பதிவு செய்வதைத் தடுப்பதற்காக அரசு, சட்டத்திருத்தம் கொண்டு வந்தது. ஆனால், எந்த தேதியில் இருந்து அந்த சட்டத்திருத்தம் நடைமுறைக்கு வரும் என்பது குறித்த எந்த அறிவிப்பும் இல்லை.

எங்களது சங்கத்தின் சார்பில் ஏராளமான வீ்ட்டு மனைகள் விற்கப்பட்டுள்ளது. விவசாயத்துக்கு உதவாத உலர் நிலங்களை மட்டுமே நாங்கள் வீட்டு மனைகளாக பிரித்து விற்பனை செய்கிறோம். விவசாய ஈரநிலங்களை ஒருபோதும் வீட்டு மனைகளாக மாற்றி விற்கவில்லை.

லட்சக்கணக்கான ஏழை, எளிய பொதுமக்கள் வீட்டு மனைகள் வாங்கி உள்ளனர். அவர்கள் தற்போது அந்த நிலங்களை விற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பொதுவாக அங்கீகாரமில்லாத வீட்டுமனை விற்பனை தொடர்பான வழக்குகளில் அதிகாரிகள் முறையாக விசாரித்து தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கத்தான் நீதிமன்றம் இதுவரை உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆனால் தற்போது ஒட்டுமொத்தமாக பத்திரங்கள் பதியக்கூடாது என உத்தரவு பிறப்பித்து இருப்பது அனைத்து தரப்பையும் பாதிப்படையச் செய்துள்ளது. எனவே அந்தத் தடையை உயர் நீதிமன்றம் நீக்க வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x