Published : 23 Jul 2022 06:54 PM
Last Updated : 23 Jul 2022 06:54 PM

செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா: ஜூலை 28-ல் 4 மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை

சென்னை: செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவை முன்னிட்டு வரும் 28-ம் தேதி 4 மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை விடப்படும் என்று அமைச்சர் ஏ.வ.வேலு தெரிவித்தார்.

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் வரும் 28-ம் தேதி மாமல்லபுரத்தில் தொடங்கவுள்ளது. இதற்கான தொடக்க விழா சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது. அங்கு நடைபெற்று வரும் முன்னேற்பாடு பணிகளை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன், பொதுப்பணித் துறை அமைச்சர் ஏ.வ.வேலு ஆகியோர் இன்று (23-ம் தேதி ) ஆய்வு செய்தனர்.

பின்னர் அமைச்சர் ஏ.வ.வேலு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: "44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் சென்னையில் நடைபெறுவதால், சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களுக்கு வரும் 28-ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்க தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

எனவே, இந்தப் பகுதிகளில் அன்றைய தினம் கட்டாயம் உள்ளூர் விடுமுறை விடப்படும்" என்று அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x