Published : 09 May 2016 08:47 PM
Last Updated : 09 May 2016 08:47 PM

பொறியியல் படிப்புக்கு 1.65 லட்சம் பேர் ஆன்லைனில் பதிவு

பொறியியல் படிப்புக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு ஏப்ரல் 15-ம் தேதி தொடங்கியது. பிளஸ்-2 தேர்வு முடிவு வெளியிடப்பட்ட 7 நாளைக்குள் ஆன்லைனில் பதிவுசெய்ய வேண்டும் என்று அண்ணா பல்கலைக்கழகம் ஏற்கெனவே அறிவித்துள்ளது.

இந்த நிலையில், இன்று மாலை 6 மணி நிலவரப்படி, பொறியியல் படிப்புக்கு ஒரு லட்சத்து 65 ஆயிரத்து 415 பேர் பதிவு செய்துள்ளனர். அவர்களில் 96 ஆயிரத்து 632 பேர் ஆன்லைனில் விண்ணப்பக் கட்டணத்தை செலுத்தியிருப்பதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

பிளஸ் 2 தேர்வு முடிவு மே 17-ம் தேதி வெளியிடப்படும் என்று தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x