8,193 கோயில்களுக்கு அறங்காவலர் நியமனம்: ஆக.20-க்குள் விண்ணப்பிக்க அறநிலையத் துறை அழைப்பு

8,193 கோயில்களுக்கு அறங்காவலர் நியமனம்: ஆக.20-க்குள் விண்ணப்பிக்க அறநிலையத் துறை அழைப்பு
Updated on
1 min read

சென்னை: தமிழகத்​தில் 8,193 கோயில்​களுக்கு அறங்​காவலர்​கள் நியமன அறி​விப்பை இந்து சமய அறநிலை​யத் துறை வெளி​யிட்​டுள்​ளது. அதன்​படி, அறங்​காவலர் நியமனத்​துக்கு விண்​ணப்​பிக்க ஆக.20 கடைசி நாள் என இந்து சமய அறநிலை​யத் துறை அறி​வித்​துள்​ளது.

தமிழகத்​தில் ஆட்சி மாற்​றத்​தைத் தொடர்ந்​து, நிர்​வாகக் காரணங்​களுக்​காக கடந்த ஆட்​சி​யில் நியமிக்​கப்​பட்ட பரம்​பரை அல்​லாத அறங்​காவலர்​களைப் பதவி வில​கு​மாறு இந்துசமய அறநிலை​யத்துறை அறி​வுறுத்​தி​யது.

இதனை ஏற்று அவர்​கள் அனை​வரும் தங்​கள் பதவி​களை ராஜி​னாமா செய்​தனர். தற்​போது காலி​யாக உள்ள அந்த இடங்​களுக்​குத் தகு​தி​யான நபர்​களைத் தேர்ந்​தெடுக்​கும் பணியை அறநிலை​யத் துறை தீவிரப்​படுத்​தி​யுள்​ளது. அதன்​படி, தற்​போது 8,193 கோயில்​களுக்கு அறங்​காவலர்​கள் நியமன அறி​விப்பை அறநிலை​யத்​ துறை வெளி​யிட்​டுள்​ளது.

இதுகுறித்து வெளி​யிடப்​பட்ட செய்​திக்​குறிப்​பு: இந்து சமயஅறநிலை​யத் துறை சட்​டப்​பிரிவு 49(1)-ன் கீழ் வரும், பட்​டியலில் சாராத 8,193 கோயில்​களுக்​குப் பரம்​பரை முறைவழி சாரா அறங்​காவலர்​கள் நியமிக்​கப்பட உள்​ளனர். விண்​ணப்​பிக்க விரும்​பும் நபர்​களுக்​கான தகு​தி​கள், நிபந்​தனை​கள் மற்​றும் கோயில் விவரங்​கள் அறநிலை​யத் துறை​யின் அதி​காரப்​பூர்வ (www.hrce.tn.gov.in) இணை​யதளத்​தில் பதிவேற்​றம் செய்​யப்​பட்​டுள்​ளன.

தகு​தி​யுள்ள நபர்​கள் இணை​யதளம் வழி​யாக நேரடி​யாக விண்​ணப்​பிக்​கலாம் அல்​லது இணை​யதளத்​தில் விண்​ணப்​பத்​தைப் பதி​விறக்​கம் செய்​து, பூர்த்தி செய்​யப்​பட்ட படிவத்தை உரிய ஆவணங்​களு​டன் இணைத்து சம்​பந்​தப்​பட்ட மாவட்ட உதவி ஆணை​யர் அலு​வல​கத்​தில் நேரிலோ விரைவு அஞ்​சல் மூல​மாகவோ சமர்ப்​பிக்​கலாம்.

பூர்த்தி செய்​யப்​பட்ட விண்​ணப்​பங்​களை ஆகஸ்ட் 20-ம் தேதி மாலை 5.45 மணிக்​குள் அனுப்ப வேண்​டும். ஏற்​கெனவே 1,012 கோயில்​களுக்கு அறங்​காவலர் நியமனம் மற்​றும் 14 மாவட்​டங்​களுக்​கான மாவட்​டக் குழு உறுப்​பினர்​கள் நியமனம் குறித்த அறி​விப்​பு​கள் வெளி​யிடப்​பட்டு பணி​கள் நடை​பெற்று வரு​வது குறிப்​பிடத்​தக்​கது. இவ்​வாறு கூறப்​பட்​டுள்​ளது.

8,193 கோயில்களுக்கு அறங்காவலர் நியமனம்: ஆக.20-க்குள் விண்ணப்பிக்க அறநிலையத் துறை அழைப்பு
டெல்லியில் பிரதமர் இல்லம் முன் போராட்டம் நடத்திய ராகுல் காந்தி கைது

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in