Published : 07 Apr 2014 12:11 PM
Last Updated : 07 Apr 2014 12:11 PM

சிகரெட்டை அணைக்காமல் வீசியதால் 18 குடிசைகள் சாம்பல்

சென்னை கொருக்குப்பேட்டை ரயில்வே காலனி மீனம்மாள் நகரில் குடிசைப் பகுதி உள்ளது. ஞாயிற்றுகிழமை மாலையில் சிவா என்ற இளைஞர் சிகரெட் புகைத்து விட்டு அணைக்காமல் போட, அந்த சிகரெட் துண்டு காற்றில் குடிசையில் விழுந்து தீப்பிடித்தது. காற்றும் வேகமாக வீசியதால் தீயை கட்டுப்படுத்த முடியவில்லை. கொருக்குப்பேட்டை, தண்டையார்பேட்டை, சத்தியமூர்த்தி நகர், எஸ்பிளனேடு ஆகிய நான்கு இடங்களில் இருந்து தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் ஆறுமுகம்(60) என்பவருக்கு தீக்காயம் ஏற்பட்டது. அவர் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x