Published : 24 Jun 2022 07:58 AM
Last Updated : 24 Jun 2022 07:58 AM

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று ராமேசுவரம் வருகை

ராமேசுவரம்: தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி ராமேசுவரத்துக்கு இன்று வருவதை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி தனது குடும்பத்தினருடன் இன்று (ஜூன் 24) மாலை விமானம் மூலம் மதுரை வருகிறார். அங்கிருந்து கார் மூலம் ராமேசுவரம் சென்று தனியார் விடுதியில் தங்குகிறார்.

நாளை அதிகாலை ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலில் நடைபெறும் ஸ்படிக லிங்க பூஜையில் ஆளுநா் தனது குடும்பத்தினருடன் பங்கேற்கிறார். பின்னர் தனுஷ்கோடி சென்றுவிட்டு மாலையில் மதுரைக்கு திரும்புகிறார்.

ஆளுநா் ஆா்.என்.ரவி வருகையை முன்னிட்டு ராமேசுவரம், பாம்பன், தனுஷ்கோடி ஆகிய பகுதிகளில் காவல் துறையினர் பாதுகாப்பை அதிகரித்து உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x