Last Updated : 22 Jun, 2022 07:08 PM

 

Published : 22 Jun 2022 07:08 PM
Last Updated : 22 Jun 2022 07:08 PM

அக்னி பாதை திட்ட எதிர்ப்பு: கோவையில் இந்திய ஜனநாயக மாணவ சங்கத்தினர் போராட்டம்

கோவை: அக்னி பாதை திட்டத்தை திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் (டிஒய்எஃப்ஐ) கோவை ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்திய அரசின் அக்னி பாதை திட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் இளைஞர்கள் ஆங்காங்கே போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இந்த திட்டத்தை திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கோவை ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தப் போராட்டத்தில் சங்கத்தின் மாவட்ட செயலாளர் கே.எஸ்.கனகராஜ், மாவட்ட தலைவர் ஸ்டாலின் குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இதேபோல, இந்திய மாணவர் சங்த்தினர் (எஸ்எஃப்ஐ) கோவை ரயில் நிலையத்தில் ரயில்மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டங்களின்போது போராட்டகாரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x