Published : 21 Jun 2022 06:44 AM
Last Updated : 21 Jun 2022 06:44 AM

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கண்களை கட்டி சிலம்பம் சுற்றி 150 மாணவர்கள் சாதனை

கருப்புத் துணியால் கண்களைக் கட்டிக்கொண்டு சிலம்பம் சுற்றிய மாணவ, மாணவிகள்.

விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கருப் புத் துணியால் கண்களைக் கட்டிக்கொண்டு சிலம்பம் சுற்றி 150 மாணவர்கள் சாதனை படைத் தனர்.

ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே கூமாப்பட்டியில் வீர ராவணன் சிலம்பக் கூடம் சார்பில் 5 முதல் 18 வயது வரை உள்ள 150 மாணவ, மாணவிகள் கருப்புத் துணியால் தங்களது கண்களைக் கட்டிக்கொண்டு முக்கோணச் சுவடில் 575 முறை சிலம்பம் சுற்றி நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றனர்.

இதற்கான சான்றிதழ் மற்றும் பதக்கத்தை சாதனை செய்த குழுவினரிடம் நோபல் உலக சாதனை புத்தகக் குழுவினர் வழங்கினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x