Published : 13 May 2016 08:16 AM
Last Updated : 13 May 2016 08:16 AM

பிரபல நாவலாசிரியர் பூரம் எஸ்.சத்யமூர்த்தி காலமானார்

அரை நூற்றாண்டு காலமாக பிரபல இதழ்களில் சிறுகதைகள் எழுதி புகழ் பெற்றவர் பூரம் எஸ்.சத்யமூர்த்தி. உடல் நலக்குறைவு காரணமாக நேற்று காலமானார்.

கி.வா.ஜ, ஆர்.வி., அழ.வள்ளி யப்பா, கே.ஆர்.வாசுதேவன் ஆகி யோர் இவரது படைப்புகளைப் பாராட்டியுள்ளனர்.

சிறந்த குழந்தை இலக்கியம் படைத்தமைக்காக திருப்பூர் தமிழ்ச் சங்கம், பாரத ஸ்டேட்வங்கி, ஆர்.வி. அறக் கட்டளை விருதுகளை பெற்றவர். பார்வை இழந்த நிலையிலும் மாலை நேரங்களில் வேதம்கற்றுத்தந்தவர். சிறுகதை ரசனைக்காக சிறுகதை ரசிகர் மன்றமும் நடத்திவந்தார்.

துறைமுகக் கழகப் பணியில் கணிதமேதை இராமானுஜம் அமர்ந்து பணியாற்றிய இருக்கை யில் அமர்ந்து பணியாற்றிய பெருமைக்கு உரியவர். மறைந்த பூரம் எஸ்.சத்யமூர்த்திக்கு இரண்டு மகன்களும் இரண்டு மகள்களும் உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x