Published : 23 May 2016 10:09 AM
Last Updated : 23 May 2016 10:09 AM
சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கடந்த 5 ஆண்டு காலம் நடந்த நல்லாட்சி மீண்டும் தொடர வேண்டும் என்ற நம்பிக்கையில், எதிர்பார்ப்பில் தமிழக மக்கள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஏகோ பித்த ஆதரவு தெரிவித்து மகத்தான வெற்றி பெற செய்திருக்கிறார்கள்.
மக்களின் நம்பிக்கையையும் எதிர்பார்ப்புகளையும் நிறைவேற் றும் விதமாக முதல்வர் ஜெய லலிதா தலைமையில் அமைந் திருக்கும் அரசு, தொடர்ந்து நல்லாட்சி தந்து தமிழகத்தை தொலைநோக்கு சிந்தனையுடன் முன்னேற்றப் பாதையில் கொண்டு சென்று இந்தியாவிலேயே தமிழ கத்தை வளர்ச்சிமிகு மாநில மாக மாற்றிக் காட்டும் என்ற நம்பிக்கை எனக்கும், தமிழக மக்களுக்கும் நிச்சயம் உண்டு. அந்த அடிப்படையில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு பாராட்டு களையும் நல்வாழ்த்துகளையும் என் சார்பிலும், சமத்துவ மக்கள் கட்சி சார்பிலும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அறிக்கையில் சரத்குமார் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT