Published : 12 May 2016 09:13 AM
Last Updated : 12 May 2016 09:13 AM
சிவகாசியைச் சேர்ந்த அதிமுக முன்னாள் நிர்வாகிக்கு கொலை மிரட்டல் விடுத்து வருவது தொடர்பான வழக்கில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு நோட்டீஸ் அனுப்ப உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
சிவகாசியைச் சேர்ந்தவர் இ.எஸ்.எஸ்.சிவக்குமார், விருது நகர் மாவட்ட ஊராட்சி கவுன்சில ராக இருந்து, சமீபத்தில் அதிமுக வில் இருந்து நீக்கப்பட்டார்.
இந்நிலையில், அவர் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தனக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் கொலை மிரட்டல் விடுத்து வருவதாகவும், இதனால் அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்கவும், தனக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கவும் உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், ‘அதிமுகவில் எனது வளர்ச்சியைப் பிடிக்காத அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி எனக்கு பல்வேறு தொந்தரவுகள் அளித்து வந்தார். பின்னர் என்னை கட்சியை விட்டு நீக்கச் செய்தார்.
தற்போது சிவகாசி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ராஜா சொக்கருக்கு ஆதரவாக தேர்தல் பணியாற்றி வருகிறேன். இதனால் அமைச்சர் எனக்கு மிரட்டல் விடுக்கிறார் எனக் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி பொன். கலையரசன் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் ஆர்.காந்தி வாதிடும்போது, அமைச்சரின் ஆதரவாளர் ஒருவர் மனுதாரரின் வீட்டுக்குச் சென்று காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக தேர்தல் பணியாற்றி னால் தூத்துக்குடியில் இருந்து ஆட்களை அழைத்து வந்து கொலை செய்வதாக மிரட்டிச் சென்றுள்ளார். இது தொடர்பாக புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை’ என்றார்.
அரசு வழக்கறிஞர் டி.முருகானந் தம் வாதிடும்போது, மனுதாரர் அளித்த புகாருக்கு மனு ரசீது வழங்கப்பட்டுள்ளது.
இந்தப் புகார் தொடர் பாக விசாரிக்க மனுதாரருக் கும், அமைச்சருக்கும் அழைப்பாணை அனுப்பப்பட் டுள்ளது. மனுதாரர் புகார் மீது போலீஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர் என்றார்.
இதையடுத்து, தமிழக டிஜிபி, விருதுநகர் மாவட்ட ஆட்சியர், எஸ்.பி., சிவகாசி டிஎஸ்பி, சிவகாசி கிழக்கு காவல் ஆய்வாளர், அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்யக் கோரி நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT