Published : 09 May 2022 06:28 AM
Last Updated : 09 May 2022 06:28 AM

திருச்சி | காவல் நிலையங்களுக்கு நள்ளிரவில் சைக்கிளில் சென்று எஸ்.பி ஆய்வு

திருச்சி: திருச்சி மாவட்டத்தில் இரவு நேரத்தில் நடைபெறக்கூடிய குற்றச் செயல்கள், விபத்துகளின் எண்ணிக்கையை குறைக்க மாலை 6 மணி முதல் அதிகாலை 6 மணி வரை இரவு ரோந்துப் பணியை தீவிரமாக மேற்கொள்ள வேண்டுமென போலீஸாருக்கு எஸ்.பி சுஜித்குமார் உத்தரவிட்டுள்ளார்.

இந்த சூழலில் அவர் நேற்று முன்தினம் இரவு 10.30 மணிக்கு திடீரென திருச்சியிலிருந்து சைக்கிளில் புறப்பட்டு ராம்ஜிநகர், இனாம்குளத்தூர், மணப்பாறை ஆகிய காவல் நிலையங்களுக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது, நெடுஞ்சாலைகளிலும், காவல் நிலையங்களிலும் போலீஸார் முறையாக இரவு பணியை மேற்கொள்கின்றனரா என ஆய்வு செய்தார். சுமார் 100 கி.மீ தூரம் சைக்கிள் பயணம் மேற்கொண்ட அவர், அதிகாலை 4.30 மணிக்கு மீண்டும் திருச்சி வந்து சேர்ந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x