Published : 28 May 2016 09:35 AM
Last Updated : 28 May 2016 09:35 AM
சட்டப்பேரவைத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் ப.தனபால், துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் பொள்ளாச்சி ஜெயராமன், சட்டப்பேரவை முன்னவர் ஓ.பன்னீர்செல்வம், அரசு கொறடா சு.ராஜேந்திரன் ஆகியோர் முதல்வர் ஜெய லலிதாவை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
நடந்து முடிந்த சட்டப் பேரவை தேர்தலில் வெற்றி பெற்று தொடர்ந்து 2-வது முறையாக முதல்வர் ஜெயலலிதா தலைமையில் அதிமுக ஆட்சி அமைத்துள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் பேர வைத் தலைவராக இருந்த ப.தனபால், துணைத் தலை வராக இருந்த பொள் ளாச்சி ஜெயராமன் ஆகி யோர் மீண்டும் அப் பதவிக்கு வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 2011 முதல் 2016 வரை சட்டப்பேரவை முன்னவராக இருந்த நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் அவை முன்னவராகவும், அரியலூர் தொகுதியில் வெற்றி பெற்ற சு.ராஜேந்திரன் அரசு கொறடாவாக நிய மிக்கப்பட்டுள்ளனர்.
முதல்வர் வாழ்த்து
ப.தனபால், பொள்ளாச்சி ஜெயராமன், ஓ.பன்னீர்செல்வம், சு.ராஜேந்திரன் ஆகிய நால்வரும் தலைமைச் செயலகத்தில் நேற்று பகல் 1 மணியளவில் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து வாழ்த்து பெற்றனர். நால்வரும் தங்களுக்கான பொறுப்புகளில் திறம்பட பணியாற்ற ஜெயலலிதா வாழ்த்து தெரிவித்தார்.
சட்டப்பேரவைத் தலைவர் பதவிக்கான வேட்பாளர் ப.தனபால், துணைத் தலைவர் பதவிக்கான வேட்பாளர் வி.ஜெயராமன், சட்டப்பேரவையின் அவை முன்னவராக நியமிக்கப்பட்டுள்ள நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அரசு தலைமைக் கொறடாவாக நியமிக்கப்பட்டுள்ள சு.ராஜேந்திரன் ஆகியோர் தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT