Published : 03 May 2022 03:33 PM
Last Updated : 03 May 2022 03:33 PM

சென்னை | மே 5-ம் தேதி காலை வேளை மட்டும் உணவகங்களுக்கு விடுமுறை

சென்னை: வணிகர் தினத்தையொட்டி மே 5-ம் தேதி காலை வேளை மட்டும் சென்னையில் உள்ள அனைத்து உணவகங்களுக்கு விடுமுறை அளிக்கப்படும் என்று சென்னை ஓட்டல்கள் சங்கம் அறிவித்துள்ளன.

ஒவ்வொரு ஆண்டு மே 5-ம் தேதி வணிகர் தினம் கடைபிடிக்கப்படும். அன்றைய தினம் பெரும்பாலான கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.

இந்நிலையில் இந்தாண்டு சென்னையில் உள்ள உணவகங்களுக்கும் மே 5-ம் தேதி காலை ஒரு வேளை மட்டும் விடுமுறை அளிக்கப்படும் என்று சென்னை ஓட்டல்கள் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "சென்னை ஓட்டல்கள் சங்கத்தின் 2022-ம் ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த 11-ம் தேதி நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர், மே 5ம் தேதி திருச்சியில் நடைபெறும் மாநாட்டிற்கு அழைத்து, இந்த மாநாட்டில் முதல்வர் கலந்து கொள்ள இருப்பதாக தெரிவித்தார்.

வணிகர்களின் ஒற்றுமையை பறைசாற்றவும், வணிக சகோதரத்துவத்தை நிலை நாட்டவும், மே 5-ம் தேதி உணவகங்களுக்கு விடுமுறை அளித்திட கோரிக்கை வைத்தார். அதையேற்ற உணவங்களுக்கு காலை ஒரு வேளை விடுமுறை அளித்து வணிக ஒற்றுமையை உணர்த்திடும் வகையில் ஒரு மனதாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x