Published : 02 May 2022 06:38 AM
Last Updated : 02 May 2022 06:38 AM

உயிரிழந்த தலைமை காவலர் குடும்பத்துக்கு வாட்ஸ்-அப் குழு மூலம் ரூ.14 லட்சம் நிதி உதவி

வண்டலூர்: தமிழக காவல் துறையில் 1997-ம் ஆண்டு பணியில் சேர்ந்த காவலர்கள் 2,577 பேர் வாட்ஸ்-அப், டெலிகிராம் குழுக்கள் மூலம்இணைந்துள்ளனர். இவர்கள் காவல் துறையில் பணியாற்றும் சக காவலர்கள் உயிரிழந்தால், விபத்தால் பாதிக்கப்பட்டால் அவர்களின் குடும்பத்தினர்களுக்கு உதவி செய்து வருகின்றனர்.

அந்த வகையில் வண்டலூர்ஓட்டேரி காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த தலைமைகாவலர் பட்டாபி குடும்பத்துக்காக வாட்ஸ்-அப், டெலிகிராம்குழுக்கள் மூலம் திரட்டப்பட்ட ரூ.14 லட்சம் நிதியை உயிரிழந்த தலைமை காவலரின் மனைவி, மகன்களிடம் வழங்கினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x