Published : 15 May 2016 11:07 AM
Last Updated : 15 May 2016 11:07 AM

ஈழவா - தியா சமூகத்தினர் திமுக கூட்டணிக்கு ஆதரவு

நீலகிரி மாவட்டத்தில் ஈழவா - தியா சமூகத்தினர் சுமார் 1.5 லட்சம் பேர் வசிக்கின்றனர். கடந்த 1992-ம் ஆண்டு முதல் இந்த மக்க ளுக்கு ஜாதிச் சான்றிதழ் வழங் கப்படாததால் தேர்தலை புறக் கணிப்பதாக அறிவித்திருந்தனர்.

இந்நிலையில், நீலகிரி மாவட்ட ஈழவா - தியா நலச் சங்க தலைவர் ஆர்.சாத்தப்பன் கூறும்போது, ‘எங்கள் சமுதாய மக்களுக்கு ஜாதிச் சான்றிதழ் பெற்றுத் தரவும், தேவையான அனைத்து உதவிகளை செய்து தரவும் உறுதி அளித்துள்ளதால் தேர்தல் புறக்கணிப்பை கைவிட்டு, திமுக - காங்கிரஸ் கூட்டணியை ஆதரிக்க முடிவு செய்துள்ளோம்’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x