Published : 24 Apr 2016 10:08 AM
Last Updated : 24 Apr 2016 10:08 AM

அட்டாக் பாண்டிக்கு நிபந்தனை ஜாமீன்

நில அபகரிப்பு வழக்கில் அட்டாக் பாண்டிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது.

மதுரை பெருங்குடியைச் சேர்ந்தவர் கழுவத்தேவர். இவருக்கு சொந்தமான நிலம் அதே பகுதியில் உள்ளது. இந்த நிலத்தை அட்டாக் பாண்டி அபகரித்ததாக கடந்த 2013-ம் ஆண்டு பெருங்குடி காவல் நிலையத்தில் கழுவத்தேவர் புகார் செய்தார். இந்த புகாரின் பேரில் போலீஸார் அட்டாக் பாண்டி மீது வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் ஜாமீன் கேட்டு மதுரை 6-வது நீதித்துறை நடுவர் மன்றத்தில் அட்டாக் பாண்டி மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதித் துறை நடுவர் அனுப்பிரியா முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அட்டாக் பாண்டி தரப்பில் வழக்கறிஞர்கள் என்.இளங்கோ, விவேகானந்தன் ஆகியோர் வாதிட்டனர். விசாரணைக்குப் பிறகு அட் டாக்பாண்டி தினமும் பெருங்குடி காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையின்பேரில் ஜாமீன் வழங்கி நீதித்துறை நடுவர் உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x